சேலம் சகோ.ரெஜினால்ட் அவர்களையும் நிர்வாககுழு பொதுசெயலர் பதவிக்கு ஆலோசித்தது. ஆனால் சகோ.ரெஜினால்ட் அவர்களே தான் மத்திய அரசாங்கத்தில் பொறுப்புள்ள வேலையில் இருப்பதால் இப்போதைக்கு இப்படிப்பட்ட பெரிய பொறுப்பை ஏற்றெடுக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்தார்.

மற்றொரு நபர் பெயர் யோசிக்கப்பட்டது. அவருக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு. ஆனால் பண சிக்கலில் கஷ்டப்படுவதை ஜெபக்குழு தலைவர்கள் சுட்டிக்காட்டி அவரை தவிர்த்தனர்.

FMPB பொது செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் வாரத்தில் என்னிடத்திலும் ஆலோசனை கேட்கப்பட்டது, அந்த இரவு ஒரு அறையில் நானும் சிலரும் அமர்ந்திருந்தோம். நிர்வாகக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சகோ.கிருபாகரனை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சகோ.கிருபாகரன் அடுத்த அறையில் இருந்தார். அப்போது நாடகம் போன்று பல நிகழ்ச்சிகள் அன்றைய பகல் சமயம் நடந்ததை விவரித்தார்கள்.

FMPB-யின் பொதுசெயலர் பதவி தம்பி.கிங்ஸ்லிக்கு கிடைக்கவில்லை என்றதும் FMPB-யின் முழு நிர்வாக பொறுப்பாளர்களின்மேல் சகோ.கிங்ஸ்லி கோபம் கொண்டு FMPB-யிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். சகோ.கிருபாகரன் நிலையோ அந்த சூழ்நிலையில் மிகப்பரிதாபகரமாக இருந்தது என்று முக்கியமானவர்கள் கூற கேட்டேன். சகோ.கிருபாகரன் அவர்கள் பலமுறை கிங்ஸ்லியிடம் வந்து பொது செயலராக நீங்களே இருங்கள் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். ஆனால் நீங்கள் மட்டும் FMPB-ஐ விட்டு போய்விடாதீர்கள் என்று கெஞ்சினார், அழுதார். ஜெபிக்கிற மக்கள், தாங்குகிற மக்கள் ஜெபகுழு தலைவர்கள் இதை கண்டும் கேள்விப்பட்டும் மிகவும் நொந்துப்போனார்கள். அப்போது கிங்ஸ்லி அவர்கள் கூறிய பதில் யாருமே எதிர்ப்பார்க்காதது ஆகும். பொதுசெயலர் பதவியை நீ பிச்சைபோட்டு அதை நான் பெற்று செயலர் பதவியை வகிக்கும் அவசியம் எனக்கில்லை என்று கூறிய பதில் சாட்சியில்லாததாகும். அந்த வார்த்தையை கேள்விப்பட்ட எல்லாரும் அதிர்ந்துபோனோம்.

தாழ்மையை எமில் அண்ணனிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என்று தம்பி.கிங்ஸ்லி எழுதியதை இந்த கேள்வியை கேட்ட உங்கள் கடிதத்துடன் போட்டோ காப்பி எடுத்து நீங்கள் அனுப்பிய சகோ.கிங்ஸ்லி அவர்களின் புத்தகத்தில் வாசித்தேன். சகோ.கிங்ஸ்லி அவர்கள் தன் பத்திரிக்கையில் எமிலைப்பற்றி குறிப்பிடும்போது பல நல்ல சாட்சியுள்ள விஷயங்களை தான் கற்றுக்கொண்டதாக எழுதியிருக்கிறார். ஆனால் அதில் ஒன்றும் உண்மையில்லையே!.

FMPB-யிலிருந்து தன்னார்வ ஓய்வுபெற்றேன் (Voluntary Retirement) என்று அதே பத்திரிக்கையில் தன்னைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் பொதுசெயலர் பதவி பிரச்சனைகளில் இவர் நடந்துகொண்ட முறையில் தன்னார்வ ஓய்வின் காரணமாகவா விலகினார்? இல்லையே? பொது செயலர் பதவி வேண்டும் கிடைக்கவில்லை என்ற அவர் சுபாவம் இரட்சிக்கப்படாத மனிதர்களைவிட தாழ்ந்த நிலையில் தள்ளப்பட்டாரே?.

இப்படிப்பட்ட அனுபவங்களை தன்னகத்தே பெற்றவர் தாழ்மை, விட்டுக்கொடுத்தல், ஒப்புரவாகுதல், கிறிஸ்துவின் அன்பு பதவிமோகம் என்ற விஷயங்களைப்பற்றி மக்களுக்கு எப்படி பிரசங்கிக்கமுடியும்?. அது மாய்மாலமாக அல்லவா தோன்றும்.

நானும், ஹாரிஸ் ஹில்டன் அவர்களும் அன்று பெரியமலையிலிருந்து ஓடியா வந்தோம். நாங்கள் மலையிலிருந்து இறங்கிவந்த சூழ்நிலையானது FMPB-யின் மிது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவா வந்தோம்?, அல்லது கோபத்தின் காரணமாகவா?, ஏமாற்றத்தின் காரணமாகவா? வெறுப்பின் காரணமாகவா? அல்லது கிங்ஸ்லி எழுதியதைப்போல் பின்மாற்றம் காரணமாகவா? மலையைவிட்டு இறங்கினோம். சில வாரங்களிலேயே சகோ.ஹாரிஸ் ஹில்டன் திரும்பவும் அந்த பன்றி குடிசைக்கே திரும்பி சென்று கடினமாக தன் மிஷனரி ஊழியத்தை நிறைவேற்றினாரே!.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN