நான் ஜெபித்தபடி நடந்தது (மோகன் சி.லாசரஸ்) கூறுகிறார்!:

நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் 2014 ஆகஸ்ட் 17ம் தேதி டிவியில் கூறியதாவது: நாம் ஜெபித்ததுபோலவே நல்ல பிரதமர் நமக்கு கிடைத்திருக்கிறார். திரு.மோடி அவர்கள் தலைமையில் BJP அரசாங்கம் மூலம் தேவன் இந்திய நாட்டுக்கு செழிப்பை தருவார்.

எல்லா விதமான ஆட்சியும், தேவனால் உண்டாக்கப்படுகிறது. நம் ஜெபத்துக்கு கர்த்தர் பதில் கொடுத்தப்படியால் நாம் தேவனை துதிப்போம். மோகன் சி.லாசரஸ் ஜெபத்தின் பலன்தான் மேலேயும், கீழேயும் நீங்கள் வாசித்த, வாசிக்கப்போகும் செய்திகளாகும். மோகன் சி.லாசரஸ் செய்த ஜெபத்தின் பலன்தான் நீங்கள் கீழே வாசிப்பது:


புதுடெல்லி 2014 ஆகஸ்ட் 14 செய்தி குறிப்பு கூறுவதாவது:

BJP அரசாங்கம் திரு.மோடி தலைமையில் பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களில் மட்டும் 308 மத கலவரங்கள் நடந்துள்ளன. மேலும் நடந்த மற்ற மத கலவரங்களைக்குறித்து இந்திய மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர். திரு.கிரன்ரிஜுஜு பதில் அளித்தபோது இவ்வாறு கூறினார். நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் 308 மத கலவர சம்பவங்கள் நடந்துள்ளன.

உத்திர பிரதேசத்தில் 56 மதக்கலவர சம்பவங்களும்,
மகாராஷ்ட்ராவில் 51 மதக்கலவர சம்பவங்களும்,
கர்நாடகாவில்44 மதக்கலவர சம்பவங்களும்,
ராஜஸ்தானில்33 மதக்கலவர சம்பவங்களும்,
பீகாரில்32 மதக்கலவர சம்பவங்களும்,
குஜராத்தில் மறுபடியும்26 மதக்கலவர சம்பவங்களும்

மற்ற மாநிலங்களில் சிற்சில இடத்தில் மதகலவரங்கள் நடந்துள்ளது. இது அரசாங்கம் அறிவித்த கணக்கு ஆகும். அரசாங்க கணக்கில் குறிப்பிடப்படாத மதக்கலவர சம்பவங்கள் ஏராளம் இந்தியாவில் நடந்துள்ளது.

தங்கள் BJP அரசு மிகப்பெரும்பான்மையுடன் திரு.மோடி தலைமையில் ஜெயித்துவிட்டது என்று அறிந்தவுடனே, RSS, பஜ்ரங்தள், சிவசேனா, BJP கட்சியினர் தங்களை கட்டவிழ்த்துவிட்டதுபோல் ஆங்காங்கு மதகலவரங்களில் ஆங்காங்குள்ள போலீஸ்துணையுடன் இந்துமதம் அல்லாத பல மதத்தினர்களை துன்புறுத்தவும், கட்டுப்படுத்த முடியாதபடி மிக தைரியமாக கலவரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தி, BJPயின் பிரதமராக திரு.மோடி அவர்கள் பதவியேற்பு சடங்கு முடியும் முன்பே பரவ ஆரம்பித்ததால் இந்துமதம் அல்லாதவர்கள் யாவரும் பெரும் பயத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலங்களவையில் மதகலவர செய்திகளை உள்துறை மந்திரியே வெளியரங்கமாக அறிவித்தும் பிரதமர்.திரு.மோடி அவர்கள் நடவடிக்கை எடுத்ததாகவோ, தன் கட்சியினரையும், RSS இயக்கத்தினரையும் கண்டித்ததாகவோ தெரியவில்லை!. தான் ஆட்சி செய்த குஜராத் மதகலவர சம்பவத்தில் 3 நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருந்ததைப்போல இப்போதும் அமைதி காக்கிறார்.

குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட இந்து மதம் அல்லாதவர்களைக்குறித்து தன் வருத்தத்தையாவது திரு.மோடி அவர்கள் அறிவித்திருக்கலாம். இனி போகபோக என்னவெல்லாம் மத சம்பந்தமான மாற்றங்களைகுறித்து புதிய சட்டங்கள் வரப்போகிறதோ தெரியவில்லை. மத சம்பந்தமான புதுபுது பிரச்சனைகள் நிச்சயம் தோன்றபோகிறது.

தமிழ்நாடு செழிக்கும், சுபிட்சம் உண்டாகும் என்று மோகன் சி.லாசரஸ் வருடாந்திர தீர்க்கதரிசனம் கூறியவுடனே தமிழ்நாட்டில் சம்பவித்ததெல்லாம் மேலே வாசித்த மத கலவரங்கள் எல்லாம் குறித்து வாசகர்கள் குறிப்பாக தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் யாவரும் அறிவார்கள்.

இன்னும் நம் கிறிஸ்தவர்கள் மோகன் சி.லாசரஸ்ஸின் தீர்க்கதரிசனத்தை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்!.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN