அரவாணியை ஆயர் ஆக்கியவர்:

இதுவரை வாசித்த குறிப்பிட்ட அந்த சபைகளின் ஸ்தாபகர்தான் இந்தியாவிலேயே அரவாணியை தன் சபைக்கு ஆயராக்கி அந்த சபையில் பிரச்சனை உண்டாகி அதன்பின் அந்த அரவாணியை மெட்ராஸ் டையோசிஸ் பிஷப் CSI சபையின் ஆயராக்க முயற்சித்து, ஜாமக்காரனில் அதை வெளியிட்டு அதை வாசித்த CSI சபையினர் தங்கள் எதிர்ப்பை காட்டியதால் அந்த அரவாணியை ஆயர் ஆக்கும் முயற்சியை கைவிட்டனர். இப்படிப்பட்ட வேத வசனத்துக்கு முரணான பல புதுமை கருத்துக்களை கொண்டவர்தான் மேலே குறிப்பிட்ட சபைகளின் ஸ்தாபகர் ஆவார்.

ஒரு பிரபல கிறிஸ்துவின் சபை, சபை மக்கள், சபை ஆயர், பிஷப் ஆகியவர்கள் தங்கள் சாட்சியுள்ள வாழ்க்கையில் வசனத்தில் கட்டப்பட்டவர்களாக இருக்கவேண்டுமே!. வருகை நெருங்கிவிட்டதே! சரிப்படுத்த வேண்டியதை சரிப்படுத்தாமல்போனால், குறிப்பாக பரிசுத்த குலச்சலை சரிப்படுத்தாமல்போனால்! ஒருவேளை வருகைக்குமுன் மரணம் வந்துவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு போவார்கள்?, இவர்களை பின்பற்றிய சபை மக்களும் இவர்கள் பின்னாலேயே நரகத்துக்கு அல்லவா போக வேண்டிவரும்.

ஆண்டவர் சொன்னதுபோல காதுள்ளவன் கேட்கக்கடவன், இதோ இயேசு சீக்கிரம் வரப்போகிறார். மாரநாதா!.

செய்திகள்! செய்திகள்!!
அன்பு மதம் இஸ்லாம்.......?
தீவிரவாத இஸ்லாமியர் - தங்கள் இனத்தில்
உள்ளவர்களையும் சித்திரவதை செய்கிறார்கள்:
தங்கள் கட்டளைக்கு மாறாக ஓட்டுபோட்ட 11 பேரின் விரல் துண்டிப்பு:

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலின்போது, ஓட்டுபோட்ட 11 பேரின் விரல்களை தலிபான் பயங்கரவாதிகள் துண்டித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், நேற்று முன்தினம், இரண்டாவது சுற்றுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தலிபான் பயங்கரவாதிகளின் எச்சரிக்கையை மீறி, ஹெராத் மாகாணத்தில் ஓட்டுபோட்ட, அப்பாவி மக்கள் 11 பேரின் விரல்களை தலிபான்கள் துண்டித்துள்ளனர். சமான்கான் என்ற மாகாணத்தில் தேர்தல் பணியாளர்கள் சென்ற பஸ் நேற்று குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதில் தேர்தல் பணியாளர்கள் நான்குபேர் மற்றும் ஆறு பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM