மெடிக்கல் கல்லூரியில் பணிபுரியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாவரும் ஒரு இயக்கம் அமைத்து
CSI நிர்வாகத்துக்கு எதிராக பல போராட்டங்களையும் நடத்தியது.
இப்போது நடந்த இந்த பண ஊழலில் கையும், களவுமாய் பிடிப்பட்ட நிலையில் மருத்துவ கல்லூரிக்கும்,
CSIக்கும், பிஷப் அவர்களுக்கும் மிகுந்த அவப்பெயர் உண்டானது.
மேலும் மருத்துவ கல்லூரியில் பணிப்புரியும் டாக்டர்களுக்கு சம்பளப்பணம் இரண்டு பகுதியாக கொடுக்கப்பட்டதாக புகார் எழும்பியுள்ளது. கொடுக்கும் சம்பள தொகையில் பாதி
வெள்ளை பணம், பாதி கருப்பு பணம் வாசகர்களுக்கு அது விளங்கும் என்று நினைக்கிறேன். வெள்ளை பணம், கருப்பு பணம் என்று இரண்டு பாகமாக சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறதை இரட்சிக்கப்பட்ட உண்மை கிறிஸ்தவ டாக்டர்கள், புரொபஸர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
கடந்த 6 மாதங்களாக
கருப்பு பணம் வாங்கமாட்டோம் என்று பிடிவாதம் செய்த சில டாக்டர் சம்பளமே வாங்காமல் பணி செய்தனர். ஆனால் நிர்வாகம் தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை. சம்பளம் பேசியபடி கொடுக்கிறோம். அந்த பணம் பாதிபாதியாக கருப்பு-வெள்ளையென்று கொடுத்தால் உங்களுக்கு என்ன? உங்கள் சம்பளத்தை குறைக்கவில்லையே? என்கிறார்கள். இப்படியுள்ள கருப்பு பண ஏற்பாட்டை ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்திலிருந்து எதிர்ப்பார்க்கவில்லை? என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். மனசாட்சியுள்ள டாக்டர்கள் ராஜினாமா செய்து சம்பளத்தை வாங்காமல் கடந்த வாரம் செப்டம்பர் மாதம் கல்லூரியை விட்டும், மருத்துவ கல்லூரி வீடுகளை காலி செய்து வெளியேறினார்கள். வெளியேறும்போது
தமிழ்நாட்டில் நான் பிரசங்கம் செய்துக்கொண்டிருந்த இடத்துக்கே இந்த டாக்டர்கள் நேரில் வந்து விவரங்களை அறிவித்து, கிறிஸ்தவ ஸ்தாபனம், குறிப்பிட்ட
CSI நடத்தும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி, கிறிஸ்தவ CSI திருமண்டலம் இப்படி
சாட்சியிழந்து, தெய்வபயம் அற்றுப்போனதே! என்று மிகவும் மனம் வருந்தி ஜெபித்துப்போனார்கள். என் மனம் மிகவும் வேதனையடைந்தது.
நான் நேசிக்கும் கேரளா CSI டையோசிஸ்களில் ஒன்றான
தெற்கு கேரளா டையோசிஸ்ஸில் இப்படியொரு சாட்சியிழந்த சம்பவம் நடந்து, அது நாடே அறியும் வண்ணம்
TVயிலும், எல்லா தினசரி பத்திரிக்கைகளிலும் வெளிவந்ததே? என்றும், இதை ஜாமக்காரனில் எழுதி அறிவிக்கும் நிலை வந்ததே! என்றும் மிகவும் வேதனைப்படுகிறேன்.
இதை ஜாமக்காரனில் எழுதுவதால் என்ன சம்பவிக்கும்? வழக்கம்போல் எல்லா டையோசிஸ்களும் செய்வதைப்போல்,
பிஷப் அவர்கள் என்னை வெறுப்பார். அவரை சார்ந்த ஆயர்கள் (எல்லாரும் அல்ல) சிலர் என்னை வெறுப்பார்கள். டையோசிஸ் நிர்வாகிகளும் என்னை வெறுப்பார்கள். எனக்கு ஊழியத்துக்கு வாய்ப்பளித்துக்கொண்டிருந்த
CSI தெற்கு கேரளா டையோசிஸ்ஸின் வாசல் அடைப்படும். இவைகளையெல்லாம்
எதிர்ப்பார்த்தும் - அறிந்தும் ஏன் இதை ஜாமக்காரனில் எழுதுகிறேன் என்பதை என் வாசகர்கள்மட்டும் நன்றாக அறிவார்கள்.
நான் அங்கம் வகிக்கும் CSI சபைகளில் இப்படிப்பட்ட ஊழல்கள் பகிரங்கமாக நடக்கும்போது
அறிவிக்கும் - எச்சரிக்கும் ஊழியமான ஜாமக்காரன் ஊழியத்தை என் கையில் ஒப்புக்கொடுத்த என் தேவன் எனக்கு கொடுத்த பொறுப்பை என்னால் நிறைவேற்றாமல் இருக்கமுடியாதே!.
கர்த்தர்தாமே கிறிஸ்தவ சபைகள் நடத்தும் கல்லூரி, ஆஸ்பத்திரி, தொழிற் கல்வி போன்ற ஸ்தாபனங்களில் கஷ்டப்பட்டு படித்து மெரிட்டில் முதல் வரிசையில் உள்ள
எத்தனையோ ஏழை பிள்ளைகளின் படிப்பின் வாய்ப்பைக்கெடுத்து, அந்த படிப்பை பல லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் பேரம்பேசி விற்கும் மனசாட்சியற்ற, தெய்வ
பயமற்ற நிலை நம் CSI, லூத்தரன் சபை நிர்வாகங்களிலிருந்து நீங்கவேண்டும் என்று ஜெபிப்போம்.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என்ற கட்சி அரசியல்
CSI கிறிஸ்தவ சபையிலிருந்து எப்போது வெளியேறுகிறதோ, அப்போதுதான் நம் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் உருப்படும். வாசகர்கள் இதற்காகவும் ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
|