திருவனந்தபுரம் 2014 ஆகஸ்ட் 7:
RSS இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.பரமேஸ்வரன் என்பவர்
பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு இந்துமத புத்தகமான
பகவத் கீதையை போதிப்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானதல்ல என்றும் சமீபத்தில் வெளியான இந்திய
அரசியல் சட்ட புத்தகத்தின் அட்டைப்படமே கீதை உபதேசம் சம்பந்தமான படம்தான் இடம் பெற்றுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதியான திரு.A.R.தாவே அவர்களும் சில தினங்களுக்கு முன் கூறியதாவது: இந்தியாவில் பள்ளிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றவர்களும், ஆசிரியர்களும்
மகா பாரதத்தையும், பகவத் கீதையையும் கற்றுதரும் வகையில் பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் அவைகளை கட்டாய பாடமாக்கவேண்டும் என்றார்.
RSS இயக்கத்தின் துணை இயக்கமான பாரதீய விச்சார கேந்திரத்தின் டைரக்டர் அவர்கள்
பகவத் கீதை ஒரு மத சம்பந்தமான புத்தகம் அல்ல என்றும், அது ஆன்மீகத்தையும், தத்துவங்களையும் போதிக்கிற புத்தகம் ஆகும்.
ஆகவே அதை இந்தியாவின் தேசிய புத்தகமாக அந்த கீதையை அறிவிக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும், இப்போதுள்ள புதிய
BJP அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு சட்டமே கீதை புத்தகத்துக்கு அங்கீகாரமும், ஒப்புதலும் அளித்துள்ளது. இதை அரசியல் சட்டவிரோதம் என்று யாரும் கூறக்கூடாது என்றும் கூறினார். |