மனைவி - குடும்பம் உறவு இல்லாமல் பல வருடங்கள் வாழ்ந்து அங்கு சிறையில் கிடைக்கும் நல்ல சக்தியுள்ள ஆகாரம் சாப்பிட்டதால் சரீரசக்தி வெளியேற
Outlet வாய்ப்பு இல்லாததால் ஜெயிலுக்குள்ளேயே தங்கள் உணர்ச்சிகளை தணிக்க ஆண்கள் சிறையில்
ஆணோடு-ஆண், பெண்கள் சிறையில் பெண்ணோடு-பெண் உறவுகொள்ளும் பழக்கம் சிறைக்குள் மிக அதிகம்.
இதே பிரச்சனை உலக அனைத்து தேசங்களிலும் உள்ள
ராணுவத்தினரிடையே (ஆண் மற்றும் பெண்) மிக அதிகம் உண்டு.
ஹோமோ செக்ஸ்சுவல் (Homo-Sexual) என்ற பாவம் இந்த மாதிரி உள்ள இடங்களிலிருந்துதான் மிக அதிகமாக பெருகுகிறது. விசாரணைக் கைதிகள் விடுதலை பெற்று வெளியே வரும்போது ஒரு வித
Sex வெறியோடு வெளியே வருவார்கள். சிறையில் இவர்களுக்கு கவுன்சிலிங் உண்டு. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறைக்கு வெளியே இவர்கள் விடுதலையாகி வெளியே வந்தவுடன் கட்டாயம் சிறந்த (கவுன்சிலிங்) ஆலோசனை இவர்களுக்கு மிக அவசியம்.
மேலும் இவர்கள் மூலமாக பல இடங்களில் கற்பழிப்பு, சிறுமி-சிறுவர் பலாத்காரம் ஆகிய குற்றங்கள் அதிகமாக வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட குற்ற செயல்களிலிருந்து இவர்கள் காப்பாற்றப்பட இவர்களிடம் அன்பும், பரிவும் காட்ட இந்த கைதிகளின் குடும்பத்தினருக்கும் - சமுதாயத்துக்கும் ஆலோசனையும், விழிப்புணர்வு உண்டாக்கவும்
TV சேனல்கள், தினசரி பத்திரிக்கை, மீடியாக்கள் மூலமாக அறிவுறுத்தல் மிக அவசியம்.
ஜாமக்காரன் வாசகர்களாகிய நீங்கள் இவர்களை மனதில்கொண்டு புது உலகில் பல ஆண்டுகளுக்குபின் பிரவேசிக்கும் இந்த கைதிகளுக்காக நம் இந்திய அரசாங்கம் ஏற்ற உதவிகள் இவர்களுக்கு செய்யவேண்டி ஜெபிக்க ஆரம்பியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
|