BJP பிரதமர்.மோடியை நாம் யாவரும் கட்சி வித்தியாசம் பாராது நாம் முழுமையாக அவரை ஆதரித்தால் சீக்கிரமே உலக வரைபடத்தில் இந்தியா இந்து தேசமாக எழுதப்படும் என்று கூறியதாக கூறப்படுவது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஆபத்தான விஷயமாகும். இந்திய தேசத்தின் அமைதியை இது சீர்குலைக்கும் வகையில் இவர்கள் இருவரும் பேசியது இந்தியா எங்கும் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதைக்குறித்து பிரதமர்.மோடி அவர்கள் மௌனமாக இருக்ககூடாது. தன் அபிப்ராயத்தையும், எதிர்ப்பையும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று இந்திய தேசம் முழுவதும் எதிர்ப்பார்க்கிறது.


(துக்ளக் ஆசிரியர்.சோ ராமசாமி அவர்கள் எழுதியது 10.9.2014)
ஹிந்து - முஸ்லீம் விரோதத்தைக் கடுமையாக்க உதவும் வார்த்தைகள்:

இது ஹிந்துநாடு. இங்குள்ள அனைவரும் ஹிந்துக்கள்தான் என்று பா.ஜ.க.வினர் சிலரும், ஹிந்து அமைப்பினர்பலரும் பிரசாரம் செய்யத்தொடங்கி இருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரேகூட இப்படிப் பேசியிருக்கிறார். இது சற்றும் ஏற்க முடியாத பேச்சு. இங்குள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்தான் என்பதை, ஹிந்துக்கள் அல்லாதவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களேகூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை, வலுவாகத்திணித்து, எல்லோருமே ஹிந்துக்கள் என்று பேசுவது சற்றும் ஏற்கக்கூடிய விஷயம் அல்ல.

அனைவரும் இந்தியர்கள் என்றால் ஒப்புக்கொள்ளலாம். மதரீதியாக எல்லோரையும் ஒன்றாகப் பாவிப்பது போல, ஒரு மதத்தின் பெயரைச்சொல்லி, எல்லோருமே அந்தப் பெயரில் அடங்குபவர்கள்தான் என்று கூறுவது பொருந்தாத விஷயம்.

மெஜாரிட்டி சமூகத்தினரின் வலுவைக்காட்டவும், மைனாரிட்டி சமூகத்தினரின் பலவீனத்தைக் காட்டவும் இந்த மாதிரி வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. இது ஆளும்கட்சி அரசைக்குறித்து மிகவும் ஆழமான சந்தேகங்களை மக்கள் மனதில் தோற்றுவிக்கும். பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துவிட்டதால்தான், இந்த மாதிரிப் பிரசாரங்கள் நடக்கின்றன. இதற்கு அரசு கடுமையான எதிர்ப்புத்தெரிவிக்கவேண்டும். மோடியோ, அமிஷ்ஷாவோ இது பற்றிப்பேசாமல் இருப்பது, இதற்கு அவர்களுடைய அங்கீகாரம் உண்டு என்று கூறுவதுபோல் இருக்கிறது என்ற விமர்சனம் மற்ற மதத்தினரிடையே மாத்திரமல்ல, ஹிந்துக்களிடையே கூடத்தோன்றும் என்று திரு.சோ அவர்கள் எழுதியுள்ளார். இதில் குறிபிட்டப்படவேண்டிய விஷயம் திரு.சோ அவர்களும் RSS இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்பதே!.

(மீடியா) பத்திரிக்கைக்காரர்கள் கூறுவதாவது: இந்தியாவில் யார் மோடி அரசை விமர்சித்தாலும் அவரின் நிர்வாகத்தைக்குறித்து யார் பேசினாலும் உடனுக்குடன் தன்னுடைய கருத்தை டிவிட்டரில் வெளியிடும் திரு.மோடி அவர்கள் இவ்வளவு பெரிய சர்ச்சையுள்ள பேச்சுகளுக்கு தனது கருத்தை வெளியிடாமல் மௌனம் சாதிப்பது ஏன்? என்கிறார்கள்.


BJP அரசின் நீதிதுறை தலையீடு:

இந்தியாவில் இத்தனை காலம் வழக்கத்தில் இருந்த நீதிபதிகள் அடங்கிய குழுவால் நடைமுறைபடுத்தப்பட்ட நீதிபதி நியமன முறையை மாற்றப்பட்ட மசோதா (பில்) மக்களவையில் ஏகமனதாக 12 ஆகஸ்ட் 2014 அன்று நிறைவேறியது. நீதிபதிகளை - உச்சமன்ற நீதிபதிகள் குழு நியமிப்பதை நிறுத்தி 6 நபர்கள் அடங்கிய அரசியல்வாதிகளை உள்ளடங்கிய குழுக்கள்தான் உச்சமன்ற நீதிபதி முதல் மற்ற எல்லா உயர் நீதிபதிகளையும் நியமிக்கப்போகிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய ஆபத்து உண்டு. நியமன குழுவில் எல்லாராலும் கனப்படுத்தப்பட்ட இரண்டு நபர்கள் இக்குழுவில் இணைக்கப்படவேண்டும் என்பதில் அந்த இருவர் BJP அரசியல்வாதிகளாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம் நீதிபதிகள் உச்சமன்ற நீதிபதி பதவிக்கு அல்லது உயர் நீதிபதி பதவிக்கு தங்களை நியமிக்கவேண்டி சிபாரிசுக்காக பெரும் பணத்தோடு அந்த 2 அரசியல்வாதிகளையும் நீதிபதிகள் அணுகலாம் என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகிறார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN