சில வருடங்களுக்குமுன் TVயில் விஜய் டிவியோ அல்லது வேறு ஏதோ ஒரு TV சேனலில் ஒரு தொடர் நிகழ்ச்சியை பார்த்தேன். அது எந்த TV என்று எனக்கு ஞாபகம் இல்லை. அதில் உண்மை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு குடும்ப விவகாரம் பற்றி அலசப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பிரிந்த குடும்பங்களை TV நிலையத்துக்கு வரவழைத்து கணவன்-மனைவி-மாமியார் ஆகியவர்களை நேரில் பேட்டிகண்டு பிரிந்த கணவன்-மனைவிமார்களின் பிரச்சனைகளைக் கேட்டு தவறு யார் பக்கம் என்று தீர்ப்பு கூறி அவர்களை சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியை முன்நின்று நடத்தியது யார் தெரியுமா? சினிமாவில் பிரபல நடிகையாக பரிமளித்த லட்சுமி என்பவர் ஆவார். இந்த லட்சுமிக்கு பொதுமக்கள் அறிய சுமார் 5 கணவன்மார்களுடன் வாழ்ந்தவராவார். இவர் இப்போது மறுபடியும் கணவனை விவாகரத்து செய்த ஒரு பிராமண இந்து குடும்பத்தை சேர்ந்தவர் ஆகும். இந்த குறிப்பிட்ட லட்சுமி என்ற அந்த நடிகையின் மகள் இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவள் சிலமுறை தற்கொலையிலிருந்தும் போதைக்கு அடிமைப்பட்ட நிலையில் பலமுறை காப்பாற்றப்பட்டு 3 திருமணங்கள் செய்து இரண்டு கணவர்களை விவாகரத்து செய்து இப்போது சுதந்திர பறவையாக இருக்கிறாள். இதை எதற்கு இங்கு உதாரணத்துடன் கூறினேன் என்றால் குடும்ப பிரச்சனைகளை தீர்த்துவைத்தவளும், 5 கணவர்களோடு வாழ்ந்தவளுமான அந்த சினிமா நடிகை.லட்சுமி TV சேனல் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரிந்த புருஷனையும்-மனைவியையும் கூடிவர செய்து அவர்களோடு பேசி எப்படி அவர்களை ஒன்று சேர்த்து வைப்பார்?. அந்த நடிகையின் தகுதி என்ன? இதை கேட்க தமாஷாக இல்லை?.

அந்த TV நிலையத்துக்கும், சினிமா நடிகை லட்சுமிக்கும் நான் தகுதியைப்பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி, திரு.பாஸ்கரன் என்ற முதல் கணவனுடனும், மற்ற மூன்று கணவன்மார்களுடன் உங்களாலேயே இசைந்து வாழ்ந்து குடும்பம் நடத்த முடியவில்லையே!. தமிழ்நாட்டில் உள்ள மற்ற குடும்பங்களில் உள்ள பிரிந்த கணவன்-மனைவிமார்களை பிரியாமல் வாழுங்கள் என்று நீங்கள் அவர்களுக்கு ஆலோசனைக் கூற உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? என்று கேட்டேன்.

நம் சகோ.தினகரன், நாலுமாவடி சகோ.மோகன்.சி.லாசரஸ், சகோ.சாம் ஜெபதுரை போன்றவர்கள் நான் எழுதிய கடிதத்துக்கு எப்படி பதில் எழுதாதபடி குற்ற மனசாட்சியுள்ளவர்களாக இருந்தார்களோ, அப்படியே இவர்களிடமிருந்தும் பதில் எனக்கு வரவில்லை!.

ஜாமக்காரன்: அன்பானவர்களே, கேள்வி கேட்டவர்களும் இந்த வாசிக்கின்ற என் வாசகர்களும் அறியவேண்டியது. மேலே வாசித்தப்படி சில ஒழுங்கீனங்கள் இதைப்போல் நம்முடைய பல சபைகளிலும் உண்டு. சபை என்பது கிறிஸ்துவின் சரீரம். இந்த சபைதான் மணவாளன் இயேசுகிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படும். அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்குமுன் சபை எடுத்துக்கொள்ளபட வேண்டும் என்பதில் கர்த்தர் மிக கரிசனை உள்ளவராக இருக்கிறார். அவர் வருகையில் நாம் கைவிடப்பட்டால் சபையின் சபை மக்களின் கதி மிகவும் பரிதாபமாக இருக்கும். ஆகவே அவர் வருகையில் சபை எடுத்துக்கொள்ளப்பட தகுதிவேண்டுமே?. சாதாரண மல்யுத்தத்துக்கு சட்டம் உண்டு என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும் நிரூபத்தில் எழுதுகிறார். அப்படியிருக்க கிறிஸ்தவ சபைக்கு சட்டதிட்டம் உண்டே?. நம் இஷ்டம்போல் சபை அங்கத்தினனாகவோ, ஆயராகவோ, பிஷப்பாகவோ, பிஷப் கம்மிஷரியாகவோ, மாடரேட்டராகவோ பதவி வகிக்கமுடியாதே?. உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிக முக்கியம் பரிசுத்தமாகும். பரிசுத்தம் வந்துவிட்டால் ஒழுக்கமும், நீதியும், நியாயமும் தானே வரும். ஆகவேதான் சில வருடங்களாக நான் கேள்விப்பட்டதும், சென்னை வேதாகம கல்லூரியில் மேலே குறிப்பிட்ட அந்த பெண் பிஷப் கமிஸரி அவர்கள் படிக்கும்போதே அவரைக்குறித்து நான் கேள்விப்பட்டதும் அதன்பின் அவரும், அவரின் அடுத்த கணவரும் வெளிநாட்டுக்கு சென்றது அங்கு உண்டான குடும்ப பிரிவுகள், இப்படி பல சம்பவங்களை அறிந்ததால்தான் இதை எழுதுகிறேன்.

இந்த பெண் கம்மிஸரியைப்பற்றி புகைப்படங்கள் எதையும் இப்போது நான் வெளியிட விரும்பவில்லை.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN