பெண் பிஷப் கம்மிஸரி!:

குறிப்பு: கீழே நீங்கள் வாசிக்கப்போவது: தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரபலமான சபையும், அதன் தலைமையையும் பற்றிய செய்தியுமாகும். கேரளா மற்றும் இந்தியா முழுவதும் இந்த குறிப்பிட்ட சபைக்கு மிக ஏராளமான கிளை சபைகள் இதற்கு உண்டு. (இந்த சபையின் பெயரை நான் குறிப்பிடவில்லை).

ஒரு வருடத்துக்குமுன்பே இந்த குறிப்பிட்ட சபையின் பெண் கம்மிஷரியைப்பற்றி சில கடிதங்கள், புகைப்படங்கள் வேறு சில ஆதாரங்களையும், ஏராளமான செய்திகள் எனக்கு வந்தது. அந்த பெண் கம்மிஷரி அவர்களின் விவாகரத்து, காதல் ஆகியவைகளைப்பற்றிய செய்திகளை நான் அரசலும், புரசலுமாய் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் என் கைக்கு கிடைத்த தகவல் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல இடங்களிலும் இந்த குறிப்பிட்ட சபையின் கிளை சபைகள் ஏராளமாக இந்தியா முழுவதும் உருவாகின. CSI சபை ஆயர்களைவிட நல்ல ஆயர்கள் அந்த சபையில் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆகவே ஒவ்வொரு சபையும் மிக நல்ல முறையில் ஏராளமான ஆத்துமாக்களை குடும்பங்களை கொண்ட சபையாக உருவெடுத்தது. அந்த சபைகள் வளர்ந்து பெயர் பெற்றுக் கொண்டிருக்கிறது. பிஷப் கே.பி.யோகன்னான் அவர்களின் பிலிவர்ஸ் சர்ச் முழுவதையும் இந்த குறிப்பிட்ட சபை விலைபேசும் செய்திகள் கூட வெளிவந்தது.

நான் குறிப்பிடும் இந்த சபையின் ஸ்தாபகர் ஒரு அரசியல்வாதி என்றாலும் இவரின் சபை ஆயர்கள் ஸ்தாபகரை முன்மாதிரியாக வைக்காமல் கர்த்தருக்கு பயந்து மிக நன்றாக ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் மாநிலங்களில் உள்ள இவர்களின் சபைகளில் கன்வென்ஷன்களில் நான் பிரசங்கித்தேன். இப்போதும் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது இந்த விஷயத்தைக்குறித்து எழுதியதால் இனி இவர்கள் சபையில் நான் அழைக்கப்படுவேனா என்பது தெரியாது.

இவர்களின் அனைத்து சபைக்கும் சாட்சி கெட்ட செய்தியாக செயலாக, இவர்களின் சபை தலைமையில் சில பிரச்சனை இப்போது ஏற்பட்டுள்ளது. 3 ஆண்களுடன் தொடர்புக்கொண்ட விவாகரத்துக்கள் செய்த ஒரு பெண்ணை இவர்கள் சபையின் ஆயராகவும், ஆயர்களின் தலைவராகவும், கடைசியாக இப்போது பிஷப் கம்மிஸரியாகவும் நியமித்துவிட்டனர். இப்போது இவர் இந்த சபை தலைமை பதவியில் வேலை செய்துகொண்டிருக்கிறார். இதன் சபை ஸ்தாபகர் சீக்கிரமே அனைத்து பிஷப்மார்களின் தலைமை பதவியான மாடரேட்டர் பதவியையும் இந்த பெண் பிஷப் கம்மிஸரிக்கு கொடுத்து பெண் மாடரேட்டராக இந்த சகோதரியை சபை ஸ்தாபகர் நியமித்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

காரணம் மிகப்பெரிய சொத்துக்கள் அடங்கிய, CSI சபைகளுக்கு சமமாக உயர்ந்துள்ள அந்த பிரபல சபையின் மிக அதிகமான சொத்துக்கள் தன் சொந்த ரத்த சம்பந்தமான அந்த பெண்ணுக்கு சேரவேண்டும் என்றும் வேறு யாருக்கும் கைமாறிவிடக்கூடாது என்பதும் இந்த பதவி உயர்வுக்கு காரணமாக இருக்கலாம். ஒருவேளை இந்த ஒரு காரணத்தால்தான், வசனத்துக்கு விரோதமான முறையில் பலமுறை விவாகரத்து செய்த அந்த பெண் ஆயரை ஸ்தாபகரின் மகளை பிஷப் கமிஸரியாக பதவி உயர்த்தினார்களோ!. பிஷப் கம்மிஸரி பதவிக்கு அந்த சபைகளிலேயே நல்ல ஆயர்களும், பல நல்ல பிஷப்மாரும் உண்டே! அவர்களை நியமிக்காமல் கிறிஸ்தவ வேத வசனத்தின்படி தகுதி இழந்த இந்த பெண்ணுக்கு இப்படிப்பட்ட உயர்ந்த பதவி கொடுத்ததேன்? என்று பல்வேறு இடங்களில் உள்ள அந்த குறிப்பிட்ட சபையின் சபை மூப்பர்கள், ஆயர்கள் கேட்கிறார்கள்!.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM