ஏசாயா 44:9
"விக்கிரகங்களை உருவாக்குகிறவர்கள் யாவரும் வீணர். விக்கிரகங்கள்.... ஒன்றுக்கும் உதவாது. (விக்கிரகங்கள்) அவைகள் ஒன்றும்
காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று (அவைகளை தொழுதுகொள்ளுகிறவர்கள்)
வெட்கமுண்டாக அவைகளுக்கு (விக்கிரகங்களுக்கு) தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்".
ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி,
விக்கிரகத்தை வார்ப்பிக்கிறார்கள்.
உபா 4:15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள்
ஒரு ரூபத்தையும் காணவில்லை.
ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு,
ஆண் உருவும், பெண் உருவும்,
பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு
பட்சியின் உருவும்,
பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள
யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான
விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
கண்களை வானத்திற்கு ஏறெடுத்து,
எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய
சந்திர, சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத்
தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து,
உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித
சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.
நீங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்த பின்பு,
நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்கு கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால் நீங்கள் சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள்.
(நீங்கள் குடியிருக்க சேரும் இடத்தில்) அங்கே
காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள்.
அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய். |