என் தாத்தா-பாட்டி ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஒருநாள் தங்கள் வழக்கத்தின்படி
விக்கிரகங்களை குளிப்பாட்டி, பூஜைபோடுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்யும்போது திடீரென்று
கர்த்தர் ஒரு வெள்ளைக்குதிரையிலே ஏறிவந்து தாத்தாவுக்கு தரிசனமானார். அவர் சொன்னாராம்.
"இந்த விக்கிரகங்களை நீ வழிபடவேண்டாம், வானத்தையும், பூமியையும் உன்னையும் சிருஷ்டித்த கர்த்தரையே தொழுதுக்கொள்" என்றார்.
அதற்கு என்னுடைய தாத்தா சரி அந்த தெய்வம் யார்? அவரை எப்படி தொழுதுக்கொள்ள வேண்டும்? என்று விசாரித்துக் கேட்டபோது,
வெள்ளைக்குதிரையில் வந்த கர்த்தர் சொன்னார். அவருடைய பெயர் இயேசுகிறிஸ்து. நீ அவரை தொழுக்கொள்ள
வானத்தை அன்னார்ந்து பார்த்து அவரை தொழுதுக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஆசீர்வதித்துவிட்டு போய்விட்டார்.
இயேசுகிறிஸ்துவைக்குறித்து இந்தியாவில்
மிஷனரிகள் வந்து அறிவிப்பதற்கு முன்பாகவே எங்களுடைய குடும்பம் இயேசுவை ஏற்றுக்கொண்ட குடும்பம் ஆகும். |