அவர் ஆசீர்வாதத்தைக் கூறும்முன், பின்னால் இருந்து ஒருவர் விசும்பும் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த மிஷனரி கதறி அழ ஆரம்பித்தார். யாருக்கும் அவர்தான் தாங்கள் அனுப்பின மிஷனரி என்று தெரியாது. அவர் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தபடியால், பக்கத்தில் ஒரு சகோதரர் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் சொல்வதற்கு நிமிர்ந்தபோதுதான் அவர் தாங்கள் அனுப்பி வைத்த மிஷனரி என்று எல்லாருக்கும் தெரியவந்தது.

மிஷனரி அழுது முடித்தப்பின், முகத்தை துடைத்து, எழுந்து நின்று, சபையாரை பார்த்து, நான் உங்களை சில வருடங்களுக்குமுன் பார்த்தபோது, நீங்கள் எல்லாரும் என்னையும், என் மனைவியையும் அன்போடு மிஷனரிகளாக அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் அனைவரும் ரயில் நிலையம்வரை வந்து உங்களுக்காக தொடர்ந்து ஜெபிப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் சொன்ன மாதிரி இரண்டு மூன்று வருடங்கள் ஜெபித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கர்த்தர் அந்த ஆண்டுகளில் அநேக ஆத்துமாக்களை கொடுத்தார். பின் நீங்கள் ஜெபிக்காமாற்போனபோது, நான் அநேக இழப்புகளை சந்திக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் நினைத்தேன். என்னுடைய தவறுகளோ, பாவமோ ஏன் இப்படி தொடர்ந்து இழப்புகள் என்று, இன்றுதான் தெரிந்தது. நீங்கள் எங்களுக்காக ஜெபிக்கவில்லை என்று நான் வந்த நேரத்தில் இருந்து பார்க்கிறேன். எங்களுக்காக ஒருவர்கூட ஜெபிக்கவில்லை என்பதை காண்கிறேன் என்று கூறினார். சபையார் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள்.

பிரியமானவர்களே, நாம் அனுப்பும் ஊழியர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்கிறோமா? நம் ஜெபங்கள்தான் அவர்களை எல்லா விதத்திலும் தாங்குகின்றன. நாம் ஜெபிக்காவிட்டால் கர்த்தரால் அங்கு செயல்பட முடியாது. நம்முடைய ஜெபங்கள் அத்தனை இன்றியமையாதது.

நம்மால் அங்கு சென்று ஊழியம் செய்யமுடியாது. ஆனால் ஜெபிக்கமுடியுமல்லவா? தினமும் நம்முடைய ஜெபங்களில் இப்படிப்பட்ட ஊழியர்களை நினைக்கவேண்டும். நான் ஜெபித்தால் என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, நாம் ஜெபிக்காமல் விட்டால், களத்தில் இருக்கும் அவர்களுக்கு யார் துணை செய்யமுடியும்? யார் உதவமுடியும்?.

"பவர் ஆஃப் காட்" டிவி சேனல்

கேள்வி: புதிய கிறிஸ்தவ TV சேனல் "பவர் ஆஃப் காட்" பார்த்தீர்களா?

பதில்: ஆம். ஏஞ்சல் டிவி, ஆசீர்வாதம் டிவி இவற்றிற்கு நல்ல மாற்று டிவியாக சேல்வேஷன் டிவி அமையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதுபோலவே சில நல்ல ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை அவர்கள் வெளியிட்டார்கள். அது இரட்சிப்புக்கு முதலிடம் கொடுக்கும் நிகழ்ச்சிகளை மட்டுமே அவர்கள் வெளியிடுவார்கள் என்றுதான் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் தகர்ப்பதுபோல சகோ.சாம்ஜெபதுரை குழுவில் அவர்களின் ஒருவரான சகோ.ராபின்சனின் அக்கினி ஊற்று, அக்கினி அபிஷேகம், பரலோக அக்கினி இப்படிப்பட்ட பிழையான உபதேசங்களும், அதோடு வேறு சிலர் நடத்தும் சபை ஆராதனை நிகழ்ச்சியில் ஆவியில் நிறைந்து துடிப்பதும், துள்ளுவதும், உளறுவதுமான நிகழ்ச்சிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் வெளியிட்டதால் இரட்சிப்பு அமுங்கிப்போனது. பிறகுதான் சேல்வேஷன் டிவியை ஆரம்பித்த சகோதரனும், பெந்தேகோஸ்தே சபையை சார்ந்தவர் என்பதை அறியமுடிந்தது. அவர் சபை ஆராதனையில் அவர் செய்த பிரசங்கத்தை டிவியில் காட்டினார்கள். அல்லேலுயா, ஆமென் இவைகளை மட்டுமே சரமாரியாக கூறி பிரசங்கத்துக்கு நேரம் இல்லாமல் செய்துவிடுகிறார். அந்த சேல்வேஷன் டிவி பணப்பிரச்சனையால் இப்போது நடத்த முடியாமல்போக அதற்கு பதிலாக வந்ததுதான் கோவை ஜவஹர் சாமுவேலும், அவரது மகனும் சேர்ந்து நடத்தும் பவர் ஆஃப் காட் என்ற புது சேனல். ஆனால் இது மற்றதைக்காட்டிலும் மிகவும் உபதேச குழப்பம் நிறைந்த சேனலாக அமைந்ததுதான் டிவி காணும் கிறிஸ்தவர்களுக்கு வந்த சோதனையாகும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN