அலிகரின் இக்லாஸ் என்ற இடத்தில் அஸ்ரோய் என்ற கிராமத்தில்மட்டும் வால்மீகி என்ற சமூகத்தை சேர்ந்த 23 குடும்பங்கள் இந்துமதத்துக்கு கொண்டுவந்துவிட்டோம். இவர்களெல்லாம்
செவந்த் டே அட்வன்டிஸ் சபையை சார்ந்தவர்களாக இருந்தனர். கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் செவ்வாய்கிழமை இந்து மதத்துக்கு அத்தனை பேரும் மதம் மாறிவிட்டனர். இதுவரை இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தபோது ஆராதித்துவந்த கிறிஸ்தவ தேவலாயத்தை
இந்து கோவிலாக முறைப்படி மாற்ற ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கிறது. வேறு சில இடங்களில் உள்ள
Church - கிறிஸ்தவ ஆலயங்களை பள்ளிக்கூட கட்டிடங்களாக மாற்றிவிட்டோம்.
அலிகர் நகரில் மட்டும் 700 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாறினர். முன்பக்கம் நீங்கள் பார்க்கும் புகைப்படம்
அலிக்கர் நகரில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியின் படமாகும்.
இதுபோலவே
ஹாத்தரஸில் உள்ள கேஷவ்பூரில் 1500 பேர்களும், கிச்கந்தராவில் ஜீரோஹியில் 1600 பேரும் இந்து மதத்துக்கு மதம் மாற்றியுள்ளனர்.
வடஇந்தியாவில் பல கிராமங்களில் இந்து மதத்தில்சேர மனமற்ற கிறிஸ்தவர்களுக்கு
ரேஷன்கார்டு இருந்தும் பொருள் கொடுப்பதில்லை, குடிதண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. அதனால் கிறிஸ்தவர்கள் 9 மைல் தூரம் நடந்துசென்று தலையில் மூன்று குடங்களில் தண்ணீர் சுமந்து வருகின்றனர்.
போலீஸ், உணவு வழங்கல் அதிகாரியிடம் (தாசில்தார்) புகார் செய்தும் நடவடிக்கையில்லை. ஆனாலும் அந்த
ஆதிவாசி கிராம கிறிஸ்தவ மக்கள் வைராக்கியமாக மிக தொலைவு சென்று உணவுபொருள்களை அதிக விலைக்கு வாங்கி வருகின்றனர்.
அந்திக்கிறிஸ்து காலத்தில் அனுபவிக்கப்போகும் கஷ்டங்களை இப்போதுள்ள ஏழை கிறிஸ்தவர்கள் வட இந்திய கிராமங்களில் அனுபவித்து வருகிறார்கள்.
BJP அரசின் ஆரம்பமே இப்படியிருந்தால் மத சம்பந்தமாக இனிவரும் காலம் மிக கொடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. |