அதற்கு முறைப்படி ஜெபத்தோடும், கண்ணீரோடும் இயேசுவை அறிவிக்கும் உண்மையான மிஷனரிகள் எழும்ப வேண்டும். ஜெபத்தில் தொடங்கிய மிஷனரி ஸ்தாபனத்தின் அந்த ஆரம்பகால நிலை திரும்ப வரவேண்டும்.
இப்போதெல்லாம் மிஷனரி கன்வென்ஷன்களில் கலந்துக்கொள்ளவரும் கூட்டத்தினர் மிஷனரி பிரசங்கத்தையும் பிரசங்க முடிவில்
Alter Call மிஷனரி அழைப்பையும், அவர்களை மேடைக்கு அருகே வரவழைப்பதையும் மக்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அப்படியே சினிமா படம் பார்க்கும்போது இனி
கதாநாயகன் அடுத்தது என்ன செய்வான், வில்லன் அகப்பட்டான் இனி அடுத்து கடைசி கட்டமாக
போலீஸ் வரும் என்று அடுத்த சீன் என்னவாக இருக்கும் என்று அடுத்த காட்சி வருவதற்கு முன் கூறிவிடும் சினிமா ரசிகர்கள்போல மிஷனரி கூட்டம் நடந்துக்கொண்டு இருக்கும்போதே அந்த குறிப்பிட்ட மிஷனரி கூட்டத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே மக்கள் கூற பழகிக்கொண்டார்கள்.
அந்த கால ஆரம்ப நாட்களில் முதலாவது மிஷனரி ஸ்தாபன தலைவர்கள் உபவாசமிருந்து கூடி அழுது ஜெபித்தார்கள். ஆவியானவர் கிரியை செய்தார். உண்மை
மிஷனரிகள் எழும்பினார்கள். அப்படிப்பட்ட மிஷனரிகள்தான் அழுது ஜெபித்தார்கள். அந்த
மிஷனரிகளை தாங்கும் ஜெபகுழு தலைவர்களும் அழுது ஜெபித்தார்கள். அவர்கள் பல்வேறு
வேலைகள், தொழில்கள் செய்து கொண்டிருந்தாலும் வேலையின் நடுநடுவே ஆத்துமாக்களை நினைத்தும், நம் சார்பில் அனுப்பப்பட்ட
மிஷனரிகளை நினைத்தும் மிஷனரிகள் பெற்ற பிள்ளைகளை நினைத்தும் அழுவார்கள். அப்படிப்பட்ட ஜெபகுழு தலைவர்கள்தான் மனதிற்குள்ளாக ஜெபித்துக்கொண்டே
தொழில் அல்லது வேலையும் செய்தபடியிருப்பார்கள். இப்படி ஆரம்ப நாட்களில் எழும்பிய ஜெபகுழுக்களைப்போல் உண்மையான பாரத்துடன் அழுது ஜெபிக்கும் ஜெபக்குழுக்களும், ஜெபக்குழு தலைவர்களும் இப்போது எழும்ப வேண்டும்!. சபையும் அழுது ஜெபிக்கவேண்டும்.
அப்படிப்பட்ட ஆவிக்குரிய ஜெபவீரர்களின் குடும்பம்
ஆசீர்வாத தட்டு வாங்குவதில் போட்டி போட மாட்டார்கள், அந்த தட்டு வாங்காமலே தன் பங்காக அதைவிட அதிகமாக எவ்வளவு பணம்
பணித்தளத் தேவைக்கு அனுப்பலாம்! என்றுதான் ஆவிக்குரியவர்கள் யோசிப்பார்கள். உலக மக்களைப்போல் சபை மக்களிலேயே நான்தான் அதிக பணம் கொடுத்து ஆசீர்வாத தட்டு வாங்கினேன் என்ற அந்த
பெருமை என்ற பாவத்தில் விழமாட்டார்கள்.
எந்த சபை
அதிக பணம் கொடுத்தது என்பதைவிட எந்த சபை மிஷனரி பணிக்காக அதிகம்
அழுதது என்பதைத்தான் கர்த்தர் கவனிப்பார்.
எனக்கு
இமெயிலில் வந்த ஒரு மிஷனரி வயல்பிரதேச உண்மை சம்பவத்தை கீழே வெளியிடுகிறேன். |