CSIயில் மொத்தம் 22 டையோசிஸ்கள் (திருமண்டலங்கள்) உண்டு. இவற்றில்
தெற்கு கேரளா CSI டையோசிஸ்மட்டும் மெடிக்கல் காலேஜ் பணிந்துள்ளது.
கேரளா மற்றும் மத்திய அரசாங்க அனுமதிகளைப் பெற்று சிறப்பான முறையில் நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த மருத்துவ கல்லூரியைப்பற்றி ஏராளமான பண ஊழல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
MBBS, MD, படிப்புக்கான அட்மிஷனுக்கு வாங்கிய தொகையில் பண ஊழல் மிக அதிகமாக நடந்து அதைப்பற்றிய பல புகார்கள் டெல்லி மத்திய அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டு முறை
CBI ரைட் நடந்தது என்றும், மறுபடியும் கடந்த 2014 செப்டம்பர் 24ம் தேதி திடீர் என்று
CBI ரைட் நடத்தப்பட்டது என்றும் செய்திகள் கூறுகிறது.
அரசாங்க கோட்டாவில் மெரிட்டில் MD படிப்புக்கு ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அந்த சீட் அவளுக்கு கொடுக்கப்படாமல், அந்த ஒரு சீட்டுக்கு 1 கோடியே 30 லட்சம் பணம் வாங்கி வேறு ஒரு மாணவனுக்கு அட்மிஷன் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதே போல் MBBS படிப்புக்கும் ஏராளமான லட்சங்கள் மாணவர்களிடம் வாங்கப்பட்டதாகவும் ரசீதில் ஒரு தொகையும் கணக்கில் காட்டாமல் வாங்கப்பட்ட பல லட்சங்களும் ஏராளம். கல்லூரி நிர்வாகத்தின்
தலைமை முதல் - பிஷப் வரை இந்த ஊழலில் சம்பந்தப்பட்டடிருப்பதாக அறியப்படுகிறது.
இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவதாவது: மெடிக்கல் காலேஜ் தலைமை நிர்வாகியாக ஒரு
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நபரை டையோசிஸ் நியமித்தது. அவர் கல்லூரியில் பல பதவிகளில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆட்களை நியமித்து ஏறக்குறைய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கல்லூரியைப்போல கல்லூரி மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த MP தேர்தலில் கல்லூரி பொறுப்பாளர்களில் ஒருவரை
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அந்த நபரை வேட்பாளராக நியமித்து
CSI பிஷப் முதல் பல ஆயர்களும் அந்த கம்யூனிஸ்ட்டு நபருக்கு ஓட்டுப்போட தேர்தல் வேலை செய்தார்களாம். தேர்தல் நடந்த நாளில் பிஷப் அவர்களின் காரை தேர்தல் அதிகாரிகளும், போலீசும் மடக்கி பிடித்ததில் பல
கோடி ரூபாய் கடத்தப்பட்டதை கண்டுபிடித்தார்களாம். ஆனால்
பிஷப் அவர்கள் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களின் தெற்கு கேளராவின்
CSI தலைமை பிஷப் ஆனதால் தேர்தல் சமயம் மத பிரச்சனையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக செய்திகளை கசியவிடாமல் பார்த்துக்கொண்டார்களாம்.
கேரள ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில்
கிறிஸ்தவர் ஒருவரை MP வேட்பாளராக நிறுத்தியிருந்தது. ஆனால் ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிராக, ஆளும்
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பிஷப் அவர்களும், மற்றவர்களும்
கம்யூனிஸ்ட் வேட்பாளரை பகிரங்கமாக ஆதாரித்து ஓட்டு சேகரித்தால் ஆளும் கட்சியான
காங்கிரஸ் தெற்கு கேரளா CSI டையோசிஸ் பிஷப்பையும், அவருடன் சேர்ந்து ஓட்டுவேட்டை நடத்தியவர்கள்மேலும் வெறுப்பு கொண்டது.
|