அனுமானையும், துர்காதேவியையும், முருகனையும் ரூபாய் நோட்டுகளின் வழியே பரிமாற்றம் செய்வதின்மூலம் விக்கிரக தெய்வங்களை நாமும் ஆதரிப்பவர்களாவோம்.


இந்திய தேசத்தை இனி "இந்து தேசம்"
என்று பெயர் மாற்றம் செய்யவேண்டுமாம்.

மேலே வாசித்த 5 ரூபாய் நாணய சம்பவத்தைப்போல, அதனால் ஏற்பட்ட சந்தேகத்தை, பயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் கோவா என்ற மாநில துணை முதல்வர் ஒரு பெயர் கிறிஸ்தவர். அவர் பெயர் திரு.பிரான்சிஸ்-டி-சூசா ஆகும். இவர் BJP கட்சியை சேர்ந்தவர்.

2014 ஜூலை 25ம் தேதி இவர் பத்திரிக்கையாளருக்கு பேட்டியளிக்கும்போது நான் என்னை கிறிஸ்தவன் என்றோ இந்தியன் என்றோ அழைக்கப்படுவதற்கு பதில் நான் ஒரு கிறிஸ்தவ இந்து என்று அழைக்கப்படவே விரும்புகிறேன். அப்படியே கல்கத்தா-கொல்கத்தா என்றும் ஒரிசா-ஒடிசா என்றும் மாநிலங்கள் பெயர்மாற்றியதைப்போல இந்தியா இனி இந்துதேசம் என்று அழைக்கப்பட வேண்டும் என்றார். மேலும், கோவா துணை முதல்வர் கூறியதாவது: இந்தியா ஒரு இந்து நாடுதான். இது இந்துஸ்தான் எனப்படும், இந்துஸ்தானில் கிறிஸ்தவனாகிய நான் உள்பட எல்லா இந்தியர்களும், இந்துக்களே! என்றார்.


கோவா துணை முதல்வர் பேச்சு
சில மணி நேரத்தில் தலைகீழாக மாறியது!.

கோவா துணைமுதல்வர் பிரான்சிஸ் டி- சூசா அவர்கள் நான் ஒரு இந்து என்று கூற விரும்புகிறேன் என்று அறிக்கையிட்டதை வாசித்தீர்கள். இந்த செய்தி பத்திரிக்கையிலும், டிவியிலும் வெளிவந்தவுடன் கோவா கத்தோலிக்க சபை பிஷப், துணை முதல்வர் டி-சூசாவை கத்தோலிக்க சபையின் அடிப்படை உறுப்பினர் உரிமையை ரத்து செய்து கத்தோலிக்க சபையைவிட்டே Excommunicate நீக்கப்பட்டதாக அறிவித்தார். உடனே துணை முதல்வர் சபையில் வந்து பாவமன்னிப்புக்கு விண்ணப்பித்து நான் அப்படி கூறியதற்காக சபை முன்பும், கர்த்தருக்கு முன்பும், பிஷப் முன்பும் மன்னிப்பு கோருகிறேன். என்னை மறுபடியும் சபையில் சேர்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பித்து சபை மக்களுக்கு முன்பாக அறிக்கையிட்டார். மறுபடியும் கத்தோலிக்க சபை ஒழுங்கின்படி புது ஞானஸ்நானம் கொடுத்து சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த விஷயத்தில் கத்தோலிக்க சபை எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறேன்.

இதேபோல, பிரபல சினிமா பின்னணி பாடகரும், அரசாங்க கௌரவ பட்டம் பெற்றவருமான திரு.ஜேசுதாஸ் அவர்கள் சபரிமலையில் ஐயப்பனை புகழ்ந்து பாடியதற்காக கேரளா கத்தோலிக்க சபையிலிருந்து நீக்கப்பட்டார். Excommunicate செய்யப்பட்டார். தான் பெற்ற பிள்ளைக்கு சபை ஞானஸ்நானம் கொடுக்க மறுத்ததால் கோயமுத்தூர் கத்தோலிக்க சபையில் பெரும் தொகை கொடுத்து சபை மெம்பர் ஆனார். சில மாதத்தில் தன் குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று சபை ஃபாதரிடம் விண்ணப்பித்தார்.

அதற்கு பாதிரியார் நான் இனி சபரிமலையில் ஐயப்பனை புகழ்ந்து பாடமாட்டேன் என்றும், நான் ஏற்கனவே பாடியதற்கு எனக்கு பாவமன்னிப்பு வேண்டும் என்றும் விண்ணப்பித்தால் உங்கள் பிள்ளைக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பாடகர்.ஜேசுதாஸ் கடைசிவரை தன் செயலுக்கு மன்னிப்பும் கேட்கவில்லை. பிள்ளைக்கு ஞானஸ்நானமும் கொடுக்கவில்லை. தொடர்ந்து இந்து தெய்வங்களை புகழ்ந்து பாடல் ஆல்பம் வெளியிட்டு இனி நான் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார். கத்தோலிக்க சபையில் உள்ள இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் எல்லா கிறிஸ்தவ சபைகளும் பின்பற்ற வேண்டியதாகும்.

கடந்த கோவா சட்டசபையில் டி-சூசா அறிவித்ததைப்போல் கோவா BJP கூட்டணி தலைவரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு.தீபக் தாவ்லிகர், பிரதமர் திரு.மோடி அரசாங்கத்தில் இந்திய தேசம் இந்து தேசமாக மாறும் என்றார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN