சில வருடங்களுக்குமுன் ஒன்று, இரண்டு மற்றும் 5
ரூபாய் நாணயத்தில் வரையப்பட்ட இரண்டு கோடுகள் எதற்கும் சம்பந்தம் இல்லாமல், அர்த்தம் ஏதும் இல்லாமல்
சிலுவை மாதிரி காணப்பட்டது. அந்த நாணயத்தை திரும்ப பெறவேண்டும் என்று இதே ஆளும் கட்சியினரும்,
RSS இயக்கத்தினரும் அன்று போராட்டம் நடத்தினார்கள்.
அப்படியிருக்க இந்த இந்துமத தெய்வ விக்கிரகம் இப்போது மட்டும் எப்படி 5 ரூபாய் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்துவின் உருவத்தை இதே அரசாங்கம் நாணயத்திலோ அல்லது ரூபாய் நோட்டிலோ அச்சிட்டு வெளியிடுவார்களா?
இது நம் இந்திய ஜனநாயக நாட்டில் அரசாங்கம் செய்யும் அநியாயம் ஆகும். இது
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தர், சீக்கியர் இன்னும் பல மதத்தினரின் மனதை புண்படுத்தும் விஷயமாகும்.
ரிசர்வ் பேங்க்கும், இந்திய அரசாங்கத்துக்கும் நான் எழுதி அறிவித்ததைப்போல் வாசகர்களும், கிறிஸ்தவ திருச்சபைகளும் தங்களின் எதிர்ப்பை எழுத்து பூர்வமாக அரசுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம்.
மேலே கண்ட விக்கிரக தெய்வம் என்று கருதப்படும் உருவம் பொரித்த
5 ரூபாய் நாணயத்தை விக்கிரகத்தை விரும்பாத கிறிஸ்தவ தெய்வத்தின் ஆலயங்களில் அந்த நாணயத்தை காணிக்கையாக சமர்பிப்பது எப்படி? நம் தெய்வம் அந்த காணிக்கையை ஏற்றுக்கொள்வாரா?
கிறிஸ்தவ ஜாமக்கார வாசகர்கள் பணம் சில்லறையாக மாற்றும்போது அல்லது வங்கியிலிருந்து வாங்கும்போது இப்படிப்பட்ட
விக்கிரக 5 ரூபாய் நாணயங்களை வாங்காதீர்கள்.
கிறிஸ்தவர்கள் யாரும் இந்த 5 ரூபாயை காணிக்கையை ஆலயத்தில் போடவேண்டாம். தேவன் அதை ஆசீர்வதிக்கமாட்டார்.
இந்திய நாட்டு நாணயங்களிலோ, இந்திய
ரூபாய் நோட்டுகளிலோ எந்தமத தெய்வங்களின் படமும் போடக்கூடாது என்று
எல்லா மதத்தினரும் தங்கள் எதிர்ப்பை இந்திய அரசாங்கத்துக்கு தெரிவிக்கவேண்டும்.
குறிப்பாக, கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் தங்கள் எதிர்ப்பை அரசாங்கத்துக்கும்,
பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் எழுதி அறிவிக்கவேண்டும்.
கிறிஸ்தவர்கள் அரவரவர்கள் சார்பில் அவரவர்கள் சபைகளில் நிர்வாக கமிட்டிகளில் இதைக்குறித்த தங்கள் எதிர்ப்பை
சபை கமிட்டி பதிவேட்டில் முழுமனதாக பதியவைத்து
பிஷப் அவர்களின் எதிர்ப்பு கடிதத்துடன் சினாட் மூலமாக இந்திய அரசாங்கத்துக்கும், எல்லா ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தெரிவிக்கவேண்டும்.
இதை தாமதமாக செய்தால்
நாம் உபயோகிக்கும் இந்திய ரூபாய்களில் இந்து மதத்தின் 30 முக்கோடி தேவர்களின் படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ரிசர்வ் வங்கி பதிவு செய்துவிடும்.
அமெரிக்கா ஜனாதிபதி (ஒபாமா) அனுமான் விக்கிரகத்தை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்ற செய்திபோல நம் அனைவரும் பல இந்து தெய்வங்களை பாக்கெட்டிலும், மணிபர்சுகளிலும் சுமந்துக்கொண்டு சுவிசேஷமும் அறிவிக்க, துண்டுபிரதிகளை வினியோகிப்பதைப் போல அமையும்.
|