பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற நிலையில் அந்த சபையில் உள்ளவர்கள் இப்போது இருக்கிறார்கள். இந்த சபையில் உள்ள எல்லா ஆயர்களுக்கும் இந்த விஷயம் மிக நன்றாக தெரியும். இவர்களின் சில சபைகளில் அந்த பெண் பிஷப் கம்மிஸரியை தங்கள் சபையின் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அழைக்க சபை கமிட்டியில் உள்ளவர்கள் விரும்பவில்லை என்று அறிந்தபோது
சபை ஸ்தாபகர் தன் மகளை அழைக்காத அந்த சபை ஆயரை தண்டித்திருக்கிறார். பாவம் அவர் என்ன செய்வார்?.
பெண்கள் சங்கத்தின் வருடாந்திர விழாவில் யாராவது ஒரு
பெண் இந்த குறிப்பிட்ட பெண் பிஷப் கமிஸரியிடம் வந்து என் கணவர் இரண்டு பெண்களோடு தொடர்புக் கொண்டிருக்கிறார் அவர் ஏற்கனவே இரண்டு பெண்களை
விவாகரத்தும் செய்தவர் ஆவார். இப்போதுள்ள சூழ்நிலையில் நான்
பெண்கள் ஐக்கிய சங்க தலைவியாக அல்லது ஆயராக என் சபையில் நான் தொடர்ந்து ஊழியம் செய்யலாமா? என்று இந்த பெண் பிஷப் கம்மிஸரியிடம் கேட்டால் இந்த குறிப்பிட்ட
பெண் பிஷப் கம்மிஷரி என்ன பதில் கூறியிருப்பார்!. பரவாயில்லை உங்களின் தற்போதைய குடும்பநிலையானது
ஊழிய தகுதியின்மையல்ல! - என்னை பாருங்கள் நான் இரண்டு கணவன்மார்களோடு வாழ்ந்தவள் நான் இப்போதும் ஊழியம் செய்கிறேனே!.
பரிசுத்தத்தைப்பற்றி பிரசங்கம் செய்கிறேனே!. யார் என்னை குற்றம் சொல்லமுடியும்?என்றுதானே இவரிடத்திலிருந்து பதில் வரும்! சாட்சி எங்கே?
வேதம் என்ன சொல்கிறது.
(பிஷப்) கண்காணியானவன் ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும். தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான். 1 தீமோ 3:2,5.
இயேசுகிறிஸ்துவின் வசனத்துக்கு கீழ்படியும் சபையாக இந்த குறிப்பிட்ட நல்ல சபை மாறவேண்டுமானால் இயேசு கூறியபடி கீழ்படியவேண்டும்.
மனைவி தன் புருஷனைத்தள்ளிவிட்டு வேறொருவனை விவாகம் பண்ணினால் விபச்சாரஞ் செய்கிறவளாயிருப்பாள் என்று இயேசு கூறினார். மாற் 10:19.
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ள(Rev)தாயும் விவாக மஞ்சம் அசுசி படாததாயுமிருப்பதாக வேசிக்கள்ளரையும், விபச்சாரக்காரரையும் தேவன் நியாயம் தீர்ப்பார். எபி 13:4.
மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள், தன் புருஷன் மரித்தபின்புதான் தனக்கு இஷ்டமானவரையும், கர்த்தருக்குட்பட்டவரையுமாயிருக்கிற
எவனையாகிலும் விவாகம் பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். 1 கொரி 7:39 என்று நம் வேதம் திட்டவட்டமாக கட்டளையிட்டுள்ளது.
விரோத்திக்கிறவன் (உங்கள் நல்ல சபையை) நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்க... 1 தீமே 5:14. அந்த குறிப்பிட்ட சபையில் உள்ள
பிஷப்மார்கள் சீனியர் ஆயர்கள் பிஷப் கமிஸரி பொறுப்பிலுள்ள அந்த
பெண் ஆயர் விஷயத்தில் ஏதாவது நடவடிக்கை எடுத்து, சபையில் வேறு யாவருக்குள்ளும் இப்படிப்பட்ட தவறு நடக்காமலிருக்க சபை மக்களுக்கு
பரிசுத்த விவாக வாழ்க்கையைப்பற்றி கூறவும் விவாகரத்தை கண்டிக்கவும், குறிப்பிட்ட இந்த சபை
ஆயர்கள் தங்கள் பிரசங்கத்தில் குற்றமற்ற மனசாட்சியுடன் பிரசங்கித்து சபையை
சுத்திகரிக்க தைரியமான நடவடிக்கை வேண்டும். |