கேள்வி: யார் யாரோ கிறிஸ்தவ சேனல் நடத்தும்போது இப்போது
TV சேனல் நடத்தும் பலரைப்பற்றி குற்றம் சொல்லும் நீங்களே நல்ல வேதபாட நிகழ்ச்சிகளை நடத்தும் ஊழியக்காரர்களை ஒன்று சேர்த்து நல்ல ஒரு டிவி சேனல் தொடங்கினால் எங்கள் எல்லாருக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்குமே! நாங்கள் எல்லாரும் உங்களுக்கு டிவி சேனல் தொடங்க பண உதவிகளை செய்ய பலராக சேர்ந்து தீர்மானித்து இதை உங்களுக்கு எழுதுகிறோம். நல்ல பதிலையும் எதிர்ப்பார்க்கிறோம்.
பதில்: நன்றி. நீங்கள் மட்டுமல்ல நானும் பல வருடங்களாக நல்ல செய்திகளை,
மனந்திரும்புதலை குறித்த செய்திகளை மிஷனரி செய்திகளை, நல்ல
வேதபாட நிகழ்ச்சிகளை டிவி மூலம் வெளியிட யாராவது முயற்சி எடுக்கமாட்டார்களா? என்று மிகவும் பாரத்துடன் ஜெபத்துடன் காத்திருக்கிறேன்.
ஆனால் டிவி சேனல் தொடங்குவது என்பது சாதாரண காரியமல்ல. நீங்கள் உங்கள் கடிதத்தில் எழுதியபடி டிவி சேனல் தொடங்க பெரும் தொகை சேகரித்து கொடுத்து நிச்சயம் உதவுவீர்கள். அதோடு உங்கள் கடமை தீர்ந்தது. ஆனால் தொடர்ந்து டிவி சேனல் நடத்த ஆகும் பணதேவைக்கு என்ன வழி? ஒரு மாதத்துக்கு அதிகாலை தொடங்கி இரவுவரை
11 மணி நேரம் டிவி சேனல் நடத்த குறைந்தது 40 லட்சங்கள் தேவை. தனி நபர் அந்த பண சுமையை ஏற்க முடியாததால்தான் 15 நிமிடம் அல்லது
½ மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்த Sponsorsகள் தேவை. அதாவது நிகழ்ச்சிகளை தொகுத்து அளிக்கும் அல்லது நடத்தும் உபதேச குழப்பம் இல்லாத பல்வேறு ஊழியர்கள் தேவை. ஒவ்வொரு 15 நிமிடம் அல்லது
½ மணி நேரத்திற்கு சில லட்சங்கள் கொடுத்து அவர்களுடைய நிகழ்ச்சிகளை நடத்தி நமது சேனலில் வெளியிடலாம். அப்படி நல்ல ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை தயாரித்து அளிக்கும் பல ஊழியர்கள் இணைந்தால் நீங்கள் எதிர்பார்க்கும்
மிக நல்ல ஆவிக்குரிய செய்திகளை பைபிள் ஸ்டடி ஆகியவற்றை தினசரி 11 மணி நேரமும் தொகுத்தளிக்கும்
TV சேனலாக நாம் நிச்சயம் நடத்தலாம். இப்போதுள்ள குப்பை கிறிஸ்தவ டிவி சேனல்களில் வெளியிடும் செய்திகளை
யூத சிங்கம், புலி, கரடி, கழுகு ஆகியவைகளை காட்டி
அம்புலி மாமா கதைகளையே கிறிஸ்தவ செய்திகளாக கூறும் ஊழியர்களின் நிகழ்ச்சிகளையும்
கர்த்தர் சொன்னார் என்று பொய் சொல்லும் ஊழியர்களின் நிகழ்ச்சிகளையும்,
எயிட்ஸ் வியாதி சுகமானது என்று கூறும் ஏராளமான
பொய் சாட்சிகளையும் வெளியிடும் நிகழ்ச்சிகளையெல்லாம் நாம் ஓரம் கட்டிவிடலாம்.
அந்த பிழையான ஊழியர்கள் மட்டும் எப்படி தொடர்ந்து அவர்களின்
TV சேனல் நிகழ்ச்சிகளை நடத்தமுடிகிறது என்றால் அப்படிப்பட்டவர்களிடம்தான் மக்கள் பணம் கொட்டிக்கொடுக்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் அவர்களின் பொய் செய்திகளை நம்புகிறார்கள்.
இப்படிப்பட்ட ஊழியர்கள் மக்களின் பலவீனம் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். நம் கிறிஸ்தவர்களின் பலவீனம் என்ன தெரியுமா?
ஆறுதல் செய்தி வேண்டும், ஆறுதல் வசனம் வேண்டும்.
செழிப்பு உபதேசம் வேண்டும். காரணம் இந்த உலகில் பிரச்சனையில்லாதவர்களேயில்லை, ஊழியர்களானாலும், மேய்ப்பர்களானாலும், பிரசங்கியார்களானாலும் சபை விசுவாசியானாலும், விக்கிரக வணக்கக்காரர்களானாலும் இவர்கள் அனைவருக்கும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனை நீங்க ஆலோசனை வசனம் தேவையில்லை.
ஆறுதல் செய்தி கேட்டால் போதும் வசனமும் இவர்களுக்கு வேண்டாம். |