அப்போதுதான் உங்கள் ஜாமக்காரன் புத்தகத்தை கண்டேன். அது பழைய காலத்து புத்தகம் ஆகும். என் உறவினர் வீட்டில் அதை கண்டேன், வாசித்தேன், தெளிவு பெற்றேன். இப்போது தொடர்ந்து உங்கள் வாசகனாகிவிட்டேன். பல கேள்விகளுக்கு உங்கள் ஜாமக்காரனில் எனக்கு விடை கிடைத்தது. நன்றி. இப்போது 18 வருடங்களாக சென்ற அந்த பெந்தேகோஸ்தே சபைக்கு இப்போது நாங்கள் போவதில்லை!. என் மருமகள் மட்டும் போகிறாள். அவளை தடுக்கவில்லை. அவள் விருப்பத்துக்காக என் மகனும் அவன் மாமியாரும் சென்று வருகின்றனர்.

உங்கள் பத்திரிக்கை எங்களுக்கு பெரிய விழிப்புணர்வு உண்டாக்கியது. போலி அந்நிய பாஷைகளை இனம் கண்டு பிடிக்க உதவியது. மட்டுமல்ல, அன்று எங்களோடு அமர்ந்து எங்கள் சபை ஆராதனையின் DVD பார்த்தாரே, அந்த இந்துமத நண்பருக்காகவும் தேவனைத்துதித்தோம். அவர் அன்று கேட்ட கேள்வி எங்களை வெட்கப்பட வைத்தது. அவர் கேட்ட கேள்வி எங்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வழி உண்டாக்கியது. எங்களை சிந்திக்க வைத்தது. ஆண்டவர் எங்களை சரியான உபதேசத்துக்கு திருப்ப ஒரு விக்கிரக ஆராதனைகாரரை முதல் கருவியாக உபயோகப்படுத்தினாரே! துதிக்கிறோம்.

இரண்டாவது கருவியாக உங்கள் ஜாமக்காரனை காண வைத்தாரே! அதற்காகவும் துதிக்கிறோம்!. நன்றி என்றார்.

செய்திகள்! செய்திகள்!!
அன்பு மதம் இஸ்லாம்.......?
தீவிரவாத இஸ்லாமியர் - தங்கள் இனத்தில்
உள்ளவர்களையும் சித்திரவதை செய்கிறார்கள்:
புனித யாத்திரை சென்ற 25 இஸ்லாமிய பக்தர்கள் சுட்டுக்கொலை :

பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஷியா பிரிவு முஸ்லிம்கள் சிலர் கடந்த மாதம் 10 பஸ்களில் ஈரானுக்குப் புனித யாத்திரை சென்றனர். அங்கு யாத்திரையை முடித்த அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

இவர்கள் பாகிஸ்தான்-ஈரான் எல்லைப் பகுதியான டாப்டானுக்கு வந்து இரவில் தங்குவதற்காக அங்குள்ள 2 ஓட்டல்களுக்கு அந்த 10 பஸ்களும் சென்றன. ஓட்டலை அடைந்ததும் பக்தர்கள் அனைவரும் இறங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வந்த சன்னி பிரிவு இஸ்லாமிய தீவிரவாதிகள் அந்த பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும், வீசி தாக்குதல் நடத்தினர். பக்தர்கள் வந்த பஸ்களுக்கு தீ வைத்ததுடன், தற்கொலைப்படை தாக்குதலும் நடந்ததால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. ஏராளமான இஸ்லாமிய பக்தர்களின் மரணங்களை இந்த படத்தில் காணலாம். இந்த கொடூரதாக்குதலில் 25 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-அல்-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பது குறிபிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஷியா அமைப்புகள், இதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இஸ்லாமிய தேசத்தில் அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் சுட்டு சாகிறார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN