பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த
ஷியா பிரிவு முஸ்லிம்கள் சிலர் கடந்த மாதம் 10 பஸ்களில் ஈரானுக்குப் புனித யாத்திரை சென்றனர். அங்கு யாத்திரையை முடித்த அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் பாகிஸ்தான்-ஈரான் எல்லைப் பகுதியான டாப்டானுக்கு வந்து இரவில் தங்குவதற்காக அங்குள்ள 2 ஓட்டல்களுக்கு அந்த 10 பஸ்களும் சென்றன. ஓட்டலை அடைந்ததும் பக்தர்கள் அனைவரும் இறங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வந்த சன்னி பிரிவு இஸ்லாமிய தீவிரவாதிகள் அந்த பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும், வீசி தாக்குதல் நடத்தினர். பக்தர்கள் வந்த பஸ்களுக்கு தீ வைத்ததுடன், தற்கொலைப்படை தாக்குதலும் நடந்ததால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. ஏராளமான இஸ்லாமிய பக்தர்களின் மரணங்களை இந்த படத்தில் காணலாம். இந்த
கொடூரதாக்குதலில் 25 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட
ஜெய்ஷ்-அல்-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பது குறிபிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள
ஷியா அமைப்புகள், இதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இஸ்லாமிய தேசத்தில் அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் சுட்டு சாகிறார்கள்.
|