செய்திகள்! செய்திகள்!!
கிறிஸ்தவ குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ISIS என்ற இயக்கத்தினர் உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் தீ போல பரவி வருகிறார்கள். அவர்களின் ஈவு இரக்கமற்ற முறையில் கிறிஸ்தவ குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குவிக்கின்றனர். கிறிஸ்தவ சந்ததியே இருக்கக்கூடாது என்ற புது திட்டத்தில் கிறிஸ்தவ குழந்தைகளை கொல்வது என்பது இவர்களின் இப்போதைய கொடூர கொலை திட்டங்களில் ஒன்றாகும்.

இது இயேசுகிறிஸ்து மனிதனாக பிறந்து இரண்டு வயதாகும்போது ஏரோது என்ற ராஜா அவனுடைய சொந்த நாட்டில் உள்ள குழந்தைகளில் இரண்டு வயதுள்ள அத்தனை குழந்தைகளையும் வெட்டி கொன்றான். காரணம் எந்த குழந்தை இயேசுகிறிஸ்து என்பதை கண்டுபிடிக்க இயலாததால் அனைத்து குழந்தைகளையும் கொல்ல கட்டளையிட்டான். அன்று நாடெங்கும் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களின் ஓலம் அழுக்குரல் ஒலித்தது. அன்று குழந்தைகளை கொன்ற ஏரோதின் வழியை ISIS இயக்கத்தினர் பின்பற்றி இப்போது துப்பாக்கியால் கிறிஸ்தவ குழந்தைகளை சுட்டுக்கொன்று ஏரோதின் குழந்தை கொலையை பின்பற்றுகின்றனர்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் தலையில் குண்டு துளைக்கப்போவதை அறியாது. பீதியுடன் பரிதாபமாக பார்க்கும் குழந்தையை இந்த படத்தில் பாருங்கள்.

அடுத்த படத்தில் சுட்டுக் கொன்ற கிறிஸ்தவ குழந்தைகளையும், சிறுவர் - சிறுமிகளின் உடலையும் குடும்பத்தினர் விறகு அடுக்குவது போல் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி தீ வைத்தனர். கிறிஸ்தவ வழியில் அடக்க ஆராதனை செய்ய அங்கு அனுமதியில்லை.

இந்த படத்தில் அடுத்த கொலைக்காக தன் குழந்தையை பறிக்கப்போகிறார்கள் என்பதை அறிந்து குழந்தையுடன் பெற்றோரும் கதறும் காட்சி.

ஈராக், சிரியா, ரவாண்டா, கம்போடியா, யூகோஸ்லோ வாக்கியா நாடுகளில் இந்த கிறிஸ்தவ குழந்தைகள் கொலை பரவ ஆரம்பித்துவிட்டது.

மேலே கண்ட படங்கள் ஈராக் தேசத்தில் மொசூல் என்ற நகரத்தில் நடத்தப்பட்ட கொலைகளாகும். அங்குள்ளவர்கள் உலக நாடுகளில் உள்ளவர்களிடம் இந்த குழந்தை கொலைகளை நிறுத்த ஏதாவது செய்யமாட்டீர்களா என்று கெஞ்சி அறிக்கை விட்டுள்ளார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM