ரோம 1 : 22 : அவர்கள் தங்களை
ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய
ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
ரோம 1:25 : தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி,
சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.
இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான
இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அந்தப்படியே அவர்களுடைய
பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான
அநுபோகமாக மாற்றினார்கள்.
அப்படியே ஆண்களும், பெண்களைத் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி,
ஆணோடே-ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால் தகாதவைகளைச் செய்யும்படி
தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
விக்கிரக ஆராதனையை நம் வேதபுத்தகத்தின் ஆரம்பத்திலிருந்தே
நம் தெய்வம் வெறுப்பதை வாசித்திருக்கிறோம்.
அதனால்தான் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் போட்டோ முன்நின்று கைகூப்பி வணங்குவதில்லை. அப்படி வணங்கினாலே அது விக்கிரகமாகிவிடுகிறது.
அப்படியே சிலுவை அடையாளத்தை பார்த்து
கைகூப்பி வணங்கினாலும் அது விக்கிரகமாகிவிடுகிறது. அதனால்தான் நாம் இயேசுகிறிஸ்துவின் புகைப்படத்துக்கு
மாலை அணிவிப்பதோ, ஊதுபத்தி வைப்பதோ, மெழுகுதிரி கொளுத்துவதோ இல்லை. காரணம், அது விக்கிரக வணக்கமாகிவிடும்.
மேலும் அப்படி செய்தால் இயேசுகிறிஸ்து செத்துப்போனவராகிவிடுவார். செத்துப்போனவர்களின் படத்துக்குதான் புறமதத்தினர் மாலை அணிவிப்பார்கள்.
நம் தேவன் உயிரோடிருப்பவர். அவர் ஜீவிக்கிறவர், அதனால் நாமும் ஜீவிக்கிறோம். மேலே குறிப்பிட்டப்படி இயேசுவையும், மரியாளையும், அந்தோணியாரையும் கத்தோலிக்க சபையை சேர்ந்தவர்கள் மட்டுமே விக்கிரகமாக்கி மாலை அணிவித்து வணங்குவார்கள். |