கன்னியாகுமரி மாவட்டத்தில்
ஐரேனிபுரம் என்ற இடத்தில் நடந்த கூட்டங்கள் யாவும் ஆலய மைதானத்திலும், ஆலயத்தின் உள்ளேயும் ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டம் நடந்தது. பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
பாரசாலா மற்றும் திருவனந்தபுரத்திலிருந்தும் (கேரளா) சில குடும்பங்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றனர்.
டிஸ்ட்ரிக்ட் சேர்மனும், தலைமை போதகருமான
Rev.J.Oliver Stanley அவர்களும், உதவி ஆயர்
Rev.R.Renjith Suther சபை ஊழியர்.அனிஷ் ரூபன் அவர்களும், சபை பொறுப்பாளர்களுடன் இணைந்து ஜெபத்தோடு இக்கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கூட்டம் தொடங்கும் சில வாரங்களுக்கு முன்பே இவர்கள் ஏறெடுத்த ஜெப ஆயத்தம்தான் இக்கூட்டங்கள் இத்தனை பெரிய ஆசீர்வாதத்துடன் நடந்து முடிய காரணமாக அமைந்தது.
|